Header Ads



மாதம்பயை அச்சுறுத்திய முதலை, பலமணி நேரப் போராட்டத்தின் பின் பிடிக்கப்பட்டது

(முஹம்மட் ரிபாக்)

மாதம்பை கல்­மு­ருவ பகு­தியில் பொது­மக்­க­ளுக்கும் மிரு­கங்­க­ளுக்கும் பெரும் அச்­சு­றுத்­த­லாக காணப்­பட்ட முதலை ஒன்றை பிடித்­துள்­ள­தாக வன­ஜீ­வ­ரா­சிகள் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் புத்­தளம் சிராம்­பிய­டிய பிராந்­திய அலு­வ­லக அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். சுமார் 14 அடி நீள­மான முத­லையே நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இவ்­வாறு பிடிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு பிடிக்­கப்­பட்ட குறித்த முதலை, மாதம்பை கல்­மு­ருவ முங்­கேன குளப்­ப­கு­தியில் மிக நீண்ட கால­மாக காணப்­பட்­ட­துடன் அப்­ப­கு­தியில் உள்ள பொது­மக்­க­ளுக்கும் பெரும் அச்­சு­றுத்­த­லாக இருந்து வந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை குறித்த பகு­திக்குள் குறித்த முதலை காணப்­ப­டு­வ­தாக பிர­தேச மக்கள் வன­ஜீ­வ­ரா­சிகள் பாது­காப்புத் திணைக்­கள சிராம்­பி­யடிய பிராந்­திய அலு­வ­லக அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் வழங்­கினர்.

பொது­மக்கள் வழங்­கிய தக­வலின் அடிப்­ப­டையில் அந்த பிர­தே­சத்­துக்குச் சென்ற வன­ஜீ­வ­ரா­சிகள் பாது­காப்பு திணைக்­கள அதி­கா­ரி­கள் பல மணி நேரப் போராட்­டத்தின் பின்னர் குறித்த முத­லையை உயி­ருடன் பிடித்­துள்­ளனர். இவ்­வாறு பிடிக்கப்பட்ட குறித்த முதலையை வில்பத்து வனத்தில் கொண்டு விடவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.