Header Ads



முஸ்லிம் மக்களுக்காக, மைத்திரிபாலவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் - பைசர்

நாட்டில் தூய்மையான அரசியலை மேற்கொண்டுவரும் அரசியல் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன என அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.

அத்தனகல்ல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவத்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் வராற்றில் ஊழலையும், மோசடிகளையும் எதிர்த்தே வந்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 99 வீதமான முஸ்லிம் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்திருந்தனர். அவ்வாறே அவர் தலைமை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கும் இம்முறை பங்களிப்பு வழங்க வேண்டும்.

முஸ்லிம் மக்களுக்காக மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை  பலப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியாக அவர் பதவியேற்பதற்கு முன்னர் நாட்டில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதனையும் எடுத்துரைத்தார்.

சிலர் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து வருபவர்களாக இருந்தனர். ஆனால் தற்போது அந்த யுகம் முடிவடைந்து விட்டது. எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

3 comments:

  1. Agent to pull Muslim Votes; nothing will do.

    ReplyDelete
  2. பைசர்- போய் ஒன்ர மைத்திரிகிட்ட - தன்மாமுள்ள எந்த சேனவனும் இந்த மைத்திரிக்கு வாகடகளிக்க மாட்டானாம் என்று சொல்லு.

    இன்ன ஒண்ணையும் சொல்லு - இனவாதத்தால ஒரு சிறுபான்மை நசுக்கப்படும்பாது அதைப் பாத்துக்கிட்டு - அப்பவெல்லாம் இந்த மைத்திரி வீண வாசிச்சுக்கிட்டு இருந்தானே அத நாங்க ஒண்ணும் கன்டும காணாம இருந்து இவனுக்கு இன்னொரு தடவ வக்காலத்து வாங்க - நாங்க ஒண்ணும் இழிச்ச வாயனுவ இல்லன்டதையும் போய் சொல்லு ஓன்ட மைத்திரிட்ட சொல்லு............

    ReplyDelete

Powered by Blogger.