எனது கணக்கு தப்பாகாது, பீத்துகிறார் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கணக்கு தப்பாகியதைப் போல் தன்னுடைய கணக்கு தப்பாகாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உருவாக்கப்பட்டு 23 வருடங்கள் கடந்தாலும், இதுவரை நால்வரே சிறைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
23 வருடங்கள் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டு, எனினும் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றுள்ளவர்கள் நால்வர். என்ன நடந்துள்ளது. புதுக்கடைக்கு அழைப்பை எடுத்து வழக்கின் தீர்ப்புகளை மாற்றியதைப் போல், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழுத்தம் விடுத்தவர்கள் முன்னைய ஆட்சியாளர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Appa neenga puthusaana governor thane Mr. My3...and 3-years gone...
ReplyDeleteAny idea...?