Header Ads



நான் பொறுப்பல்ல, கைவிரிக்கிறார் மஹிந்த

தன்னுடைய புகைப்படத்தினை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் சில சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமைக்கு தான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு மஹிந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வெவ்வேறு அரசியல் கட்சிகளும், சில சுயேட்சை கட்சிகளும் தன்னுடைய புகைப்படத்தினைப் பயன்படுத்துவதற்கு தான் எதிர்ப்பை தெரிவிக்கப் போவதில்லை என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

 எனினும் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு சட்டநடவடிக்கை எடுக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.