Header Ads



குடியுரிமையை பரித்தாலும், எனது அரசியல் பணிகள் தொடரும் - மகிந்த

குடியுரிமையை இல்லாதொழித்தாலும் மக்களுக்காக முன்நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

தமது குடியுரிமையை நீக்குவதற்கு எத்தகைய சட்டம் ஒன்று உள்ளதென்பது தெரியவில்லை.

அவ்வாறு குடியுரிமையை பரித்தாலும் தமது அரசியல் பணிகள் தொடரும் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழு அறிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக கூறுகின்றனர்.

இதுவும் மோசடிகளை மூடி மறைப்பதற்கான முயற்சி எனவும், 8 ஆம் திகதி விவாதம் இடம்பெற்றாலும், தேர்தல் பிரச்சார விதிமுறைகளுக்கு அமைவாக பத்தாம் திகதி வரை, அது குறித்த தகவல்கள் வெளிவராதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.