Header Ads



அரசாங்கம் தோல்வியடைந்த, கொள்கைகளை பின்பற்றி வருகிறது - கோட்டாபய

தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை புரிந்துகொள்ளும் இயலுமை அரசாங்கத்திற்கு இல்லையென முன்னாள் பாதுகாப்பு செலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்கைப் ஊடாக கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கம் தோல்வியடைந்த மேற்குலக கொள்கைகளை பின்பற்றி வருகிறது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கொள்கைகளை அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது.

இந்த நிலையில், தற்போது அரசாங்கத்திற்குள்ள நெருக்கடி என்னவென்பது கூட அவர்கள் அறியாதுள்ளனர்.

எவ்வாறெனினும் அரசாங்கம் மகிந்த ராஜபக்ஷ என்ற நெருக்கடியை மாத்திரம் அறித்து வைத்திருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.