Header Ads



அதிகரிக்கும் நெருக்கடி


தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­கு­மி­டையில் நெருக்­க­டிகள் அதி­க­ரித்து செல்­வ­தா­கவே தெரி­ய­வ­ரு­கின்­றது. 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் வெற்றி பெறும் நோக்கில் இரண்டு கட்­சி­களும் பாரிய அளவில் பிர­சார வியூ­கங்­களை அமைத்து செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் கடும் நெருக்­க­டிகள் அதி­க­ரித்­து­ வ­ரு­கின்­றன.

குறிப்­பாக தேர்தல் பிர­சார மேடை­களில் இரண்டு கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்­களும்  கடு­மை­யான   விமர்­சிக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்­ளனர். குறிப்­பாக  இரண்டு கட்­சி­க­ளி­னதும் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள்  கட்­சிகள் தொடர்பில் கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். 

அது­மட்­டு­மன்றி தற்­போது  பிணை­முறி அறிக்கை வெளி­வந்­துள்ள நிலையில்  அது­தொ­டர்­பிலும் பரஸ்­பரம் விமர்­ச­னங்கள்  முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த விவ­கா­ரமும் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சிக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் இடையில் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. 

அந்­த­வ­கை­யில்­தேர்தல் காலத்தில் இரண்டு தரப்­புக்­கு­மி­டை­யி­லான நெருக்­க­டிகள் அதி­க­ரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறெனினும் ஜனாதிபதியும்  பிரதமரும் தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்லவேண்டும் என்பதில்  உறுதியாக உள்ளனர். 

No comments

Powered by Blogger.