Header Ads



மஸ்தானிடம், கண்ணீர் விட்டழுத வேட்பாளர்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில்  முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச சபையின் மல்லாவி 5ம்வட்டார வேட்பாளர் ம.தெய்வேந்திரனையும் சு.உமாதேவியையும் ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டம் இன்று மல்லாவியில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். 

அவர் தனது உரையில் இத்தேர்தலை எனது தேர்தலாகவோ அல்லது அல்லது கட்சியின் தேர்தலாகவோ அல்லாமல் உங்களது பகுதியை அபிவிருத்தி செய்வற்கான தேர்தலாக மட்டுமன்றி ஒரு அரிய சந்தர்ப்பமாக நோக்குங்கள்,  நீண்ட காலமாக எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படாமல் எல்லாவிதங்களிலும் புறக்கணிக்கப்பட்ட இப்பிரதேசங்களும் ஏனைய பகுதிகளைப் அபிவிருத்தியை காணவேண்டிய தேவை இருக்கிறது.

அதைச் செய்வற்கான ஆணையை இம்முறை நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குவதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். 

அதற்க்காக படித்த பண்பான, அரசியல் அனுபவமிக்க தோழர் ம.தெய்வேந்திரனையும் சகோதரி சு.உமாதேவியையும் நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் தனது உரையில் வேண்டுகோள் விடுத்தார். 

இக்கூட்டத்தில் உரையாற்றிய வேட்பாளர் ம.தெய்வேந்திரன் தனதுரையில் கடந்த காலங்களில் எம்மை வைத்து அரசியல் செய்தோர் எம்மை ஏமாற்றியே தம்மை வளர்த்துக் கொண்டனர்.

எமது பகுதி அபிவிருத்திக்காக நான் இரந்து வேண்டியபோதும் தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என தம்மை அழைத்தவர்கள் சற்றேனும் இரங்கவேயில்லை எனவேதான் எமது பகுதி அபிவிருத்தி  எமது எதிர்காலம் என்பவற்றை கருத்திற்கொண்டு  மிகுந்த நம்பிக்கையுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து போட்டியிட முடிவெடுத்தாக கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதியில் மல்லாகம் பகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.