நான் இன்று, துரோகியாக உள்ளேன் - ஜனாதிபதி
மத்திய வங்கி ஊழல் மற்றும் ஏனைய ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் பிரதமர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மாறாக பிரதமர் மற்றும் ஆளும் எதிர்க்கட்சி யினர் என்னை பலவீனப்படுத்தி ஊழல்வாதிகளை காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசா ரக் கூட்டம் கண்டியில் இடம்பெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றி யபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் கடந்த கால ஊழல்கள் குறித்து எனக்கு கிடைத்துள்ள அறிக்கைக்கு அமைவாக அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறை படுத்தி அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
பிரதமர் மற்றும் ஆளும் எதிர்க் கட்சியினர் அனைவரும் ஒரே நோக்கத்தில் செயற்படுவீர்கள் என்றால் இந்த பயணத்தில் என்னை பலப்படுத்துங்கள். என்னை பலப்படுத்துவதை விடுத்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னை பலவீனப்படுத்த வேண்டாம். அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் .
2014 ஆம் ஆண்டு நான் அப்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் என்மீது குற்றம் சுமத்தினார்கள். இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் என்மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
நான் எந்தக் கட்சிக்கும் துரோகம் இழைக்கவில்லை. ஊழல் மோசடிகள் அனைத்தையும் ஒழிப்பதற்கு முன்வருகின்றேன். ஊழலை ஆதரிக்கும் அவ்வாறான நபர்களுக்கு மட்டுமே நான் இன்று துரோகியாக உள்ளேன். இன்று மத்திய வங்கி அறிக்கை தொடர்பாக மேடைகளில் கூச்சல் போடும் முன்னாள் தலைவர்கள், அன்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்த போது பாராளுமன்றத்திற்கு வருகை தந்து வாக்களிக்கவில்லை.
ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய மறுகணம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த காரணிகள் அனைத்துமே எனக்கு நன்றாக தெரியும் என்றார்.
So, take action and report about the old gang soon...why only the new subject only...?
ReplyDeleteஎனக்கு அது தெரியும், இது தெரியும், எல்லாம் தெரியும் என கொக்கரித்து திரியாமல் செயலில் காட்டுபவனே உண்மையான வீரன். மஹிந்த காலத்தில் இடம்பெற்ற எல்லா ஊழல், மோசடிகள், கொலைகள் எல்லாம் நாடறிந்த உண்மைகள் அல்லவா நீர் அதிகாரத்துக்கு வந்து 3 ஆண்டுகளு கடந்து விட்டது அவைகளுக்கு எதிராக உம்மால் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது My 3 அவர்களே. ஆக இன்னும் 2 டே 2 ஆண்டுகள் உண்டு கண்ணை மூடி திறப்பதற்குள் அவை பறந்து விடும் நீர் வாழ் சுழற்றியது மட்டும் தான் மிஞ்சும் நீர் சேரித்து வைத்திருக்கும் பைல்களை எல்லாம் கறையான் தின்று விடும். அப்புறம் பழய குறுடி கதவை திறவடி தான் இந்நாட்டின் நிலமை.
ReplyDeleteyes well-said
ReplyDelete