Header Ads



இலங்கையில் இப்படியும், ஒரு திருடன்

இலங்கையில் பொலிஸ் அதிகாரியை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்ற திருடன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று அதிகாலை கந்தான ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றின் பூட்டை உடைத்து நுழைந்த திருடன் தொடர்பில், சிவில் பாதுகாப்பு உறுப்பினரால் கந்தான பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு கிடைத்தவுடன் அவ்விடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரி விற்பனை நிலையத்திற்குள் இருந்த திருடனை பிடித்துள்ளார்.

“மரியாதையாக வெளியே வந்துவிடுங்கள். உள்ளே என்ன செய்கின்றீர்கள்? ” என பொலிஸ் அதிகாரி திருடனிடம் கேட்டுள்ளார்.

“ஏன் சர் என் கடையில் என்னை அடையாளம் காண முடியவில்லையா?” என திருடன் பொலிஸாரிடம் வினவியுள்ளார்.

விற்பனை நிலையத்திற்குள் இருந்து பூட்டு மற்றும் சாவியை எடுத்துத் கொண்டு, கடையின் உரிமையாளர் போன்று திருடன் வெளியில் வந்துள்ளார்.

கடை உரிமையாளர் என்றால் அடுத்த கடையில் என்ன விற்பனை செய்கின்றார்கள் என்று கூற முடியுமா? என பொலிஸ் அதிகாரி கேட்டுள்ளார். “மீன்” என திருடன் கூறியவுடன் பொய் சொல்ல வேண்டாம் என பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் அதிகாரியை கீழே தள்ளிவிட்டு திருடன் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

Powered by Blogger.