பிக்குவை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு பிணை மறுப்பு
அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்டதப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணுவெல உத்தரவிட்டுள்ளார்.
சிறுவயது பௌத்த பிக்கு ஒருவர் தூர பிரதேசத்திற்கு சென்று திரும்புகையில் அவரை பாலியல் வன்புணர்வு செய்தமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரின் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி அவருக்கு பிணை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment