Header Ads



பாகிஸ்தானுக்கு நன்றிகூறிய ஜனாதிபதி


சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஜாவிட் பஜ்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா வந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி நேற்றுமுன்தினம் சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

நேற்றுக்காலை அவர், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, சிறிலங்காவுக்கு  அவசரத் தேவைகளின் போது பாகிஸ்தான் உரிய நேரத்தில் அளித்து வரும் உதவிகளுக்கு சிறிலங்கா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பாதுகாப்பு அமைச்சில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவையும், பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்தித்து பேச்சு நடத்தினார்.

இரதரப்பு  பாதுகாப்பு உறவுகள், ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.