முஸ்லிம்களை மீளக்குடியேற்றும் றிசாத்தின், கோரிக்கையை விக்னேஷ்வரன் நிராகரித்தார்
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனிடம் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்துக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்த முஸ்லிம் மக்களை அந்த இடங்களிலிருந்து விடுதலைப்புலிகள் விரட்டியடித்தனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களுக்காகவும் அவர்களிலிருந்து உருவாகிய பரம்பரையினருக்காகவும் காணியை பெற்றுத் தருமாறு அமைச்சர் கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு இடம்பெயர்ந்த 780 குடும்பங்கள் தற்பொழுது இனம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை குடியேற்றுவதற்கும் அவர்களது பொது விவகாரங்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கும் 1000 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவை என அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தத்தினால் காணிகளை இழந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியிருந்த முஸ்லிம்கள் தற்பொழுது புத்தளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள
முகாம்களில் குடியிருந்து வருகின்ற நிலையில், அமைச்சரின் கோரிக்கையை வட மாகாண முதலமைச்சர் புறக்கணித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment