இந்தோனேசிய ஜனாதிபதி, இலங்கை வந்தடைந்தார்
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்றைய தினம் மதியம் 12 மணியளவில் வந்தடைந்துள்ளார்.
இந்தோனேசிய ஜனாதிபதியுடன் 5 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இலங்கை வந்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
ஜனாதிபதியுடன், இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பு அமைய இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment