Header Ads



"ஜனாதிபதி மைத்திரி, பொய் சொல்லுகிறார்"

தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கத்தின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் காரணமாக சர்வதேசத்திற்கு மத்தியில் இலங்கைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

வாக்குகளை பெற தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்த வெளியிடும் கருத்துக்கள் நாட்டுக்கு பொருந்தாது. இதனால், தலைவர்கள் கருத்து வெளியிடும் போது பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாய்க்கு வந்தவற்றை எல்லாம் கூறுகிறார். இவற்றை சர்வதேசம் அறிந்துக்கொண்டால், நாட்டிற்கு பெரிய அவப்பெயர் ஏற்படும்.

இதனால், நாட்டுக்கு கிடைக்க வேண்டிய முதலீடும் கிடைக்காமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆவேசப்பட்டு பொய் சொல்லும் போது நாட்டை பற்றி சிந்திக்குமாறு கூற விரும்புகிறேன் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.