Header Ads



தேயிலையை ஆய்வுநடத்த, ரஷ்யா குழு வருகிறது

நாட்டின் தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள ரஷ்யாவின் விசேட குழுவொன்று இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளது.

இலங்கை தேயிலை சபையின் அழைப்பின் பேரில் அந்த குழு நாட்டுக்கு வருவதாக தேயிலை சபையின் ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க தெரிவித்தார்.

இலங்கை தேயிலையின் திட்டமிடல் தொழினுட்பம் மற்றும் தரம் தொடர்பில் குறித்த குழுவினர் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளனர்.

இதனிடையே, ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கொண்டு செல்லப்படும் அனைத்து கொள்கலன்களையும் சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேயிலை சபையின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய விசேட குழுவினரின் ஆய்வின் பின்னர் தாவர தொற்றுநோய் பிரிவின் தர நிர்ணய சான்றிதழை பெற்றுக் கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ஜயந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.