Header Ads



நாணயத் தாள்களின், பாவனைக்காலம் தொடர்பில் சிக்கல்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோரின் கையொப்பங்களில் வெளியான நாணயத் தாள்களின் பாவனைக் காலம் தொடர்பில் சிக்கல் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். 

மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டு​மெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

கொழும்பில் நேற்று மாலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.