Header Ads



கலால் அதிகாரியின் வீட்டுக்கு, கைக்குண்டு வீச்சு

வடமேல் மாகாணத்தின் கலால் உதவி ஆணையாளரின் மாகதுர பகுதியிலுள்ள வீட்டிற்கு கைக் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இன்று -02- அதிகாலை 01.00 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பன்னல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், தாக்குதல் இடம்பெற்ற வேளை, உதவி ஆணையாளர் லேஸ்லி ஜெயரத்ன வீட்டில் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இதேவேளை, வீட்டில் இருந்த கராஜ்ஜிலேயே கைக்குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளதோடு, இதனால் மூன்று வாகனங்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

மேலும், இதனுடன் தொடர்புடைய எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, பன்னல பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.