Header Ads



நாளைமுதல் கொழும்பில், பேரணிகள் நடத்தமுடியாது


தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதனால் நாளை முதல் கொழும்பு நகரில் பேரணிகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவினை மீறிச் செயற்படும் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றியம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவ பீட பெற்றோர் அமைப்பு ஆகியன இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.