Header Ads



திருடர்களை பிடிப்பதற்கு, ரணிலே தடை - அஸாத் சாலி

திரு­டர்­க­ளுக்கும் மோச­டி­க்கா­ரர்­க­ளுக் கும் எதி­ராக  நடவ­டிக்கை எடுப்­பதில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தடை­யாக இருக்­கின்றார். அத­னால்தான் ஜனா­தி­பதி குற்­ற­வா­ளி­க­ளுக்கு  தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­கின்றார் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரும்­போது மக்­க­ளுக்கு பல வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்­தது. அதில் முக்­கி­ய­மாக கடந்த அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்து 3வரு­டங்கள் கடந்தும்  கடந்த காலத்தில் ஊழல் மோச­டி­களில் தொடர்பு பட்­ட­வர்கள் என பகி­ரங்­க­மாக தெரி­விக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக இது­வரை எந்த சட்ட நட­வ­டிக்­கை­யையும் எடுக்க தவ­றி­யுள்­ளது. 

அத்­துடன் அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் பல மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. குறிப்­பாக இரட்டை கட­வுச்­சீட்டு விவ­கா­ரத்தில் விமல் வீர­வன்ச கைது­செய்­யப்­பட்­ட­போது, பிர­த­மரின் தலை­யீட்டால் அவர் விடு­விக்­கப்­பட்டார். அதே­போன்று  ஐக்­கிய தேசிய கட்­சி­யினர்   ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு  எதி­ராக கட்சி தலை­மை­ய­கத்தில் வைத்து எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­போது மஹிந்த ராஜபக் ஷ அவரை பாது­காத்தார். அதற்கு பிரதி உப­கா­ர­மா­கவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ராஜபக் ஷ குடும்­பத்­துக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் பாது­காத்து வரு­கின்றார்.

பிர­த­மரின் இந்த நட­வ­டிக்­கை­யி­னாலே கடந்த அர­சாங்க காலத்தில் ஊழல் மோச­டி­களில் தொடர்பு பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யாமல் போயுள்­ளது. இதனால் அர­சாங்­கத்தின் மீது மக்­க­ளுக்கு விரக்தி ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் ஊழல் மோச­டி­களை துடைத்­தெ­றி­வ­தாக தெரி­வித்து ஆட்­சிக்கு வந்து சில மாதங்­க­ளிலே மத்­திய வங்­கியில் மோசடி இடம்­பெ­ற்றுள்ளது. இதுவும் அர­சாங்­கத்­துக்கு அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் குற்­ற­வா­ளி­களை பாது­காக்கும் வகையில் பிர­தமர் செயற்­ப­டு­வ­தா­கவும் பகி­ரங்­க­மாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை கருத்­திற்­கொண்டே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஊழல்­வா­தி­க­ளுக்கு எதிராக சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதியின் இந்த கோரிக்கையானது திருடர்களை பிரதமர் பாதுகாக்கின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

2 comments:

  1. We know about you and your party...and head
    Siripputtaaan varuthu.... MP pathavi poi ippo mayor pathavikku aasai... paarkkalam...

    ReplyDelete
  2. Iwwalaw naala president enna senjar endu kelvi kettawaru...ippa Ranil am...ellam pazavi n salli

    ReplyDelete

Powered by Blogger.