Header Ads



'மாற்றவும் முடியாது, மாறவும் முடியாது - நமதே கட்சி, நமக்கே ஆட்சி'


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலக்கு நோக்கிய இணைந்த பயணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 'மாற்றவும் முடியாது மாறவும் முடியாது, நமதே கட்சி நமக்கே ஆட்சி' என்னும் கருப்பொருளில் நேற்று (20) சனிக்கிழமை மாலை கல்முனை கடற்கரை வீதியில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 

கல்முனை மசூரா குழுத் தலைவர் அல்ஹாஜ் யு.எல். கரீம் தலைமையில் நடைபெற்ற இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல். அப்துல் மஜீட், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வருமான சட்டமுதுமானி நிசாம் காரியப்பர், கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபை வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

நள்ளிரவு தாண்டி நடைபெற்ற இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிப் போராளிகள் ஜன சமுத்திரத்திரமாய் திரண்டிருந்தனர். 

(அகமட் எஸ். முகைடீன்)

No comments

Powered by Blogger.