Header Ads



கபட நாடகத்தினை அரங்கேற்றும் ஐ.தே.க.

தமது ஆட்சியில் இடம்பெற்ற 2 ஆயிரம் பில்லியன் ரூபா நட்டத்தினை மறைக்க ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியில் தற்போது கபட நாடகத்தினை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பிணைமுறி விவகாரத்திற்கு தற்போது தீர்வு கிடைத்தாலும், அது நிரந்தரமானது கிடையாது. இதன் தாக்கம் 2045ஆம் ஆண்டு வரை நீடிக்கும். அப்போது பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி நடுத்தர மக்களே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.