Header Ads



பேஸ்புக்கில் தேர்தல் பிரச்சாரம், தொடர்பில் முறைப்பாடு

சமூக ஊடகத்தில் அரசியல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தேர்தல்கள் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் பிரதேச செயலகத்துக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக கிராம அலுவலர் சமூக வலைத்தளத்தில் பிரசாரம் மேற்கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டது

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து இது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர், சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரதேச செயலகத்திற்கு மீள அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

No comments

Powered by Blogger.