எமக்கு வேதனையாக இருக்கின்றது - ரவி
பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மையை நாளை வெளிப்படுத்துவேன் என பாராளுமன்ற உறுப்பினர்தெ ரவி கருணாநாயக்க ரிவித்தார்.
கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்குவரும்போது வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரமே நாட்டில் இருந்தது. இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். அதற்காகவே தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு நாங்கள் சென்றோம். இன்று நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்வதாக ஐக்கிய தேசிய கட்சியை விமர்சிப்பது எங்களுடன் இருப்பவர்களாகும்.
அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர போன்றவர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடனே இருந்தார்கள். அன்று நாட்டின் பொருளாதாரம் அடிமட்டத்தில் இருக்கும்போது இவர்கள் வாய்திறக்கவில்லை. ஆனால் இன்று அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஐக்கிய தேசிய கட்சியை விமர்சித்து வருகின்றனர். அரசாங்கத்துக்காக அர்ப்பணித்த எங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றமையே எமக்கு வேதனையாக இருக்கின்றது.
அத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் பல மில்லியன் ரூபாக்களை மோசடி செய்ததாக மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முடிவுற்றதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுதிப்பத்திரம் அளிக்கின்றது. இது நல்லாட்சியின் அடையாளமாக இருக்க முடியாது. அதேபோன்று மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணையை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் சொல்லப்பட்ட விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. எனவே மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக பல விடயங்கள் அறிக்கையில் இருப்பதாக தெரிவித்து எங்களுக்கு சேறுபூசி வருகின்றனர். அதனால் ஆணைக்குழுவின் அறிக்கை தொட
ர்பாக நாளைய தினம் விசேட உரையொன்றை மேற்கொண்டு அதன் உண்மைத்தன்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பேன் என்றார்.
Post a Comment