Header Ads



எமக்கு வேத­னை­யாக இருக்­கின்­றது - ரவி

பிணை­முறி குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன் உண்­மைத்­தன்­மையை நாளை வெளிப்­ப­டுத்­துவேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்தெ ரவி கரு­ணா­நா­யக்க ரி­வித்தார்.

கொழும்பு கொச்­சிக்­கடை பிர­தே­சத்தில்  இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்­கு­வ­ரும்­போது வீழ்ச்­சி­யுற்­றி­ருந்த பொரு­ளா­தா­ரமே நாட்டில் இருந்­தது. இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப  நாங்கள் மிகவும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றோம். அதற்­கா­கவே தேசிய அர­சாங்கம் ஒன்­றுக்கு நாங்கள் சென்றோம். இன்று நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்து செல்­வ­தாக ஐக்­கிய தேசிய கட்­சியை விமர்­சிப்­பது எங்­க­ளுடன் இருப்­ப­வர்­க­ளாகும்.

அர­சாங்­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இருக்கும் தயா­சிறி ஜய­சே­கர, டிலான் பெரேரா, ஜோன் சென­வி­ரத்ன, சுசில் பிரே­ம­ஜ­யந்த, மஹிந்த அம­ர­வீர போன்­ற­வர்கள் மஹிந்த ராஜ­பக் ஷ­வு­டனே இருந்­தார்கள். அன்று நாட்டின் பொரு­ளா­தாரம் அடி­மட்­டத்தில் இருக்­கும்­போது இவர்கள் வாய்­தி­றக்­க­வில்லை. ஆனால் இன்று அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியை விமர்­சித்து வரு­கின்­றனர். அர­சாங்­கத்­துக்­காக அர்ப்­ப­ணித்த எங்­களின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­மையே எமக்கு வேத­னை­யாக இருக்­கின்­றது.

அத்­துடன் கடந்த அர­சாங்க காலத்தில் பல மில்­லியன் ரூபாக்­களை மோச­டி­ செய்­த­தாக மஹிந்­தா­னந்த அளுத்­க­ம­கே­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் முடி­வுற்­ற­தாக இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு உறு­திப்­பத்­திரம் அளிக்­கின்­றது. இது நல்­லாட்­சியின் அடை­யா­ள­மாக இருக்க முடி­யாது. அதே­போன்று மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ரணையை மேற்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­வந்­துள்­ளது. அதில் சொல்­லப்­பட்ட விட­யங்கள் திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  எனவே மத்­திய வங்கி பிணை­முறி  மோசடி   தொடர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்ட விட­யங்­களை   மக்கள் அறிந்­து­கொள்­ள­ வேண்டும். அறிக்­கையில் தெரிவிக்கப்பட்டதாக பல விடயங்கள் அறிக்கையில் இருப்பதாக தெரிவித்து எங்களுக்கு சேறுபூசி வருகின்றனர். அதனால் ஆணைக்குழுவின் அறிக்கை தொட

ர்பாக நாளைய தினம் விசேட உரையொன்றை மேற்கொண்டு அதன் உண்மைத்தன்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பேன் என்றார்.

No comments

Powered by Blogger.