போட்டியிட முடியாதவர்களை நாம் கைவிட மாட்டோம், உரிய இடத்தை நாம் வழங்குவோம் - கபீர்
தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெறுவதால் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னரே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இம்முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களை நாம் கைவிடமாட்டோம். அவர்களுக்கு எதிர்காலத்தில் உரிய இடத்தை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கேசரிக்கு குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக முதல் கிராம மட்டத்திலான கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நாம் உரிய முறையில் முன்னெடுத்தோம். இதனால் கிராமத்திற்கு தகுதியானவர்களை நாம் களத்தில் இறக்கியுள்ளோம். எனினும் எமக்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்தமையினால் பலரை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு முடியாமல் போனது. ஏனெனில் ஒரு வட்டாரத்தில் ஒருவரை மாத்திரமே எம்மால் களமிறக்க முடியும்.
எனினும் இம்முறை போட்டியிட முடியாதவர்களை நாம் கைவிட மாட்டோம். அவர்களுக்கு உரிய இடத்தை நாம் வழங்குவோம்.
மேலும் தேர்தல் விஞ்ஞாபன நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெறுவதால் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னரே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என்றார்.
Post a Comment