Header Ads



சாரத்தை கழற்றிவிட்டு காற்சட்டையுடன் ஓடிய பஸில் - சமீர பெரேரா


கட்சி, பதவி என்று பாராமல் இந்த நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல தீர்மானங்களை எடுத்துள்ளார் என இடதுசாரி கேந்திர நிலையத்தின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

எந்த கட்சியாக இருந்தாலும், எந்த நிறமாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சரி அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடித்து விட்டு புதிய கட்சியை ஆரம்பித்து, அதன் தலைவராக தன்னை நினைத்து செயல்படும் பஸில் ராஜபக்ஸ யாருடைய தேவைக்காக செயற்படுகின்றார்?

கடந்த காலத்தில் தேர்தலில் தோற்றவுடன், சாரத்தை கழற்றி விட்டு காற்சட்டையுடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய பஸில் இன்று கதைக்கின்றார்.

அவர்களுடைய கட்சியில் யாரேனும் தோற்றுவிட்டால் அவர்களது நாடான அமெரிக்காவுக்கு ஓடுகின்றார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு உள்ள பயமே எனவும் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.