8 மாத பெண் குழந்தை மீது, பாலியல் வல்லுறவு
8 மாத பெண் குழந்தையை உறவினர் ஒருவரே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த தம்பதியரின் பெண் குழந்தைக்குத்தான் இக்கொடுமை நேர்ந்துள்ளது. 28 வயதாகும் உறவினர் ஒருவர் 8 மாத குழந்தையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளூர் மருத்துவனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டார்.
தானும், தனது மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டதாகவும், மனைவி வீடு திரும்பியபோது படுக்கையிலும் குழந்தையின் ஆடைகளிலும் ரத்தக்கறை இருந்ததை கண்டதாகவும் குழந்தையின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் நபரை கைது செய்துவிட்டதாகவும், அவர் ஒரு தினக்கூலி ஊழியர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (திங்கட்கிழமை) குழந்தையின் நிலைமையை அறிய மருத்துவமனைக்கு சென்ற டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், குழந்தைக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் கொடூரமாக இருந்ததாக விவரித்துள்ளார்.
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், பாதிப்புகளுக்கு உள்ளான குழந்தைக்கு மூன்று மணிநேர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்த அவர், இதுபோன்ற குற்றங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், நாட்டிலுள்ள பெண்களை பாதுகாக்கும் பொருட்டு போலீஸாரின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Please Jaffna News Do not Publish.
ReplyDeletePlease Check before publishing.
This is not good message to public.
Please always publish good news.
Thank You.
This is one of the many effects from the cinema industry. Sexism, Rowdism, thuggery is taught by the cinema industry. Kushbu is also responsible for this situation.
ReplyDelete