Header Ads



கடந்த வருடம் 81 ஊட­க­வி­ய­லா­ளர்கள் படுகொலை


கடந்த 2017  ஆம் ஆண்டில் கட­மையின் போது தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­காகி  குறைந்­தது 81  ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக  பெல்­ஜி­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­மே­ளனம் (ஐ.எப்.ஜே.)  நேற்று வெளி­யி­ட ப்­பட்ட அறிக்கையில் தெரி­வித்­துள்­ளது. 

 இதற்கு முந்­திய ஆண்­டான 2016 ஆம் ஆண்டு கட­மையின் போது 93  ஊட­க­வி­ய­லா­ளர்கள் பலி­யா­கி­யுள்ள நிலையில் அத்­தொ­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் இந்த வரு­டத்­தி­லான உயி­ரி­ழப்­புகள் சிறிது குறை­வாக உள்ள போதும்  அத்­தொகை கவலை தரக்­கூ­டிய ஒன்­றா­கவே தொடர்ந்து உள்­ள­தாக அந்த சம்­மே­ளனம் குறிப்­பிட்­டுள்­ளது.

"அத்­துடன் 2017  ஆம் ஆண்டில் பெரு­ம­ள­வான ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டனர். அவர்­களில் 250  பேருக்கும் அதி­க­மானோர் சிறை­யி­லேயே தொடர்ந்தும் உள்­ளனர்"  எனத் தெரி­வித்த சர்­வ­தேச ஊட­க­வி­ய­லாளர் சம்­மே­ளனம்,  ஊட­கங்கள் சுய தணிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வது பரந்­த­ளவில் இடம்­பெ­று­வ­துடன்  ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுதந்­திர ஊட­க­வி­ய­லுக்கு எதி­ரான முறையில்  தாக்­கு­தல்­க­ளுக்கும்  அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் உட்­பட்டு வரு­வது மோச­மான அளவில் அதி­க­ரித்து வரு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

உலகில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இலக்­கு­வைக்­கப்­பட்ட படு­கொ­லைகள்,  கார் குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் துப்­பாக்கிச் சமர் என்­ப­வற்றில் சிக்கி தமது உயிரை இழந்து வரு­வ­தாக அந்த சம்­மே­ளனம் கூறு­கி­றது.

 அதி­க­ள­வான ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்ட நாடாக மெக்­ஸிக்கோ உள்­ளது,  இதற்கு அடுத்­த­டுத்த இடங்­களில் ஆப்­கா­னிஸ்தான்,  ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள்  உள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள  சர்­வ­தேச ஊட­க­

No comments

Powered by Blogger.