கல்முனை மக்களுக்காக செய்ய வேண்டிய பல அபிவிருத்திகள் எம் கண்முன்னே இருக்கின்றன5
கல்முனை மாநகரில் மக்களுக்காக செய்ய வேண்டிய பல அபிவிருத்திகள் எம் கண்முன்னே இருக்கின்றன, அதனை செய்யவேண்டும் என்பதற்காகவே நான் தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் களம் இறங்குகிறேனே தவிர எனது தனிப்பட்ட சுயநலத்திற்காக இல்லை என கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி இன்றைய தினம் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் பல இடங்களில் மக்கள் நலன் சார்ந்த பல வேலைத்திட்டங்கள் நாளாந்தம் நடைபெற்று வருகின்றன, அந்தவகையிலேதான் அம்பாறையில் சகல வசதிகளுடன் கூடிய பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போன்றுதான் எதிர்காலத்தில் கல்முனையிலும் அவ்வாறான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் விருப்பம்.
நான் எனது சுயநலத்திற்காக தேர்தலில் போட்டியிடவில்லை, மாறாக எமது பிரதேச மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன, அதனையெல்லாம் தீர்த்து வைக்கவேண்டும் அதற்காகவேண்டித்தான் நான் இங்குள்ள அமைப்பாளர் உட்பட பலர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment