Header Ads



500 மில்லியன் ரூபா, நட்டஈடு கேட்கும் அநுரகுமார

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோவிடமே அநுரகுமார திசாயக்க நட்டஈட்டினை கோரியுள்ளார்.

தங்காலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டே நட்டஈடு கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.