Header Ads



பெரும் குற்றங்கள் செய்த 50 பேர், தேர்தலில் போட்டி (விபரம் உள்ளே)


குற்றங்கள் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய 50 பேர் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக ‘மார்ச் 12’ அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களில் ஐவர் பாதாளக்கோ‌ஷ்டித் தலைவர்கள் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற 56,066 வேட்பாளர்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் மார்ச் 12 அமைப்பு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.

இந்த வேட்பாளர்களில் 14 பேர் சட்டவிரோத மதுபானம் சார்ந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்களுடன் தொடர்புடைய 6 பேரும், குற்றச்செயல்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 6 பேரும், நிதி மோசடி செய்த 14 பேரும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பாதாள உலகக்கோஷ்டித் தலைவர்கள் ஐவரும், வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரும் மரக்கடத்தலில் ஈடுபட்ட நால்வரும் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.


2 comments:

  1. I don't think they will send the name list. But, don't worry. If you select any JVP candidate, then you are free from sin!

    ReplyDelete

Powered by Blogger.