Header Ads



உலகின் மிக சிறந்த 50 உணவகங்களுக்குள், மஹேல - சங்காவின் Ministry of crab


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்காரவுக்கு சொந்தமான உணவகம் உலகின் மிக சிறந்த 50 உணவகங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.

Ministry of crab என்ற உணவகமே இவ்வாறு சிறந்த உணவங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.

தர்ஷன முனிதாஸ என்ற சமையல் கலைஞருடன் புதிய முறையில் உணவக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் இந்த உணவகத்தை கொண்டு செல்வதற்கும், பல்வேறு முறையிலான உணவு வகைகளை மக்கள் சுவைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மஹேல மற்றும் சங்கக்கார இந்த உணவகத்தின் வளர்ச்சியை கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளை இலக்கு வைத்து இதன் கிளை ஒன்று மும்பாயில் திறக்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.