Header Ads



"அலிபாபாவையும் 40 திருடர்களையும் சிறையிலடைக்கும்வரை நாம் பின்வாங்கப்போவதில்லை"


""பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் சிறையிலடைக்கும்வரை கூட்டு எதிரணியின் போராட்டம் ஓயாது'' என்று தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. சூளுரைத்துள்ளார்.

கடவத்த பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

""பிணைமுறி மோசடி விசாரணைப்பொறிக்குள் ரவி கருணாநாயக்கவையும், அர்ஜுன மகேந்திரனையும் மாத்திரம் பலிக்கடாக்களாக்கிவிட்டு ஏனைய உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக் கின்றது. ஆனால், பிணைமுறியுடன் தொடர்புடைய அலிபாபாவையும் 40 திருடர்களையும் (ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள்) சிறையிலடைக்கும்வரை பிணைமுறி போராட்டத்திலிருந்து நாம் பின்வாங்கப்போவதில்லை.

அதேவேளை, தன் மீதான குற்றச்சாட்டுகள் போலியானதென ரவி கருணாநாயக்க கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும். இன்று தன்மானமுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களால் வீதியில் நடமாடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை இன்று சிறுபிள்ளைகள் கண்டதும், ""அம்மா திருடன், அம்மா திருடன்'' என்று கூச்சலிடுகின்றனர்.

ஓடிவந்து அம்மாவும் கொடியில் தொங்கும் ஆடைகளை மறைத்துவைக்கின்றாள். காரணம் அதுவும் கொள்ளையடிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தில்'' என்றார்.

No comments

Powered by Blogger.