Header Ads



இலங்கை நெடுஞ்சாலையில், ஒரேநாளில் 3 கோடி வருமானம்

கடந்த வார இறுதியில் இலங்கையின் தெற்கு அதிவேக நெஞ்சாலையின் ஊடாக, ஒரு இலட்சம் வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்போது ஒரு நாள் வருமானமாக 3 கோடி ரூபாவுக்கும் அதிகம் வருவாய் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது 2017ஆம் ஆண்டில் ஒருவருடத்தில் ஒரு நாளில் பெற்ற அதிக வருமானம் என அதன் செயற்பாட்டு இயக்குனர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வீதியில் கடந்த 22ஆம் திகதி மாத்திரம் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ள நிலையில் அதேயளவு வாகனங்களின் எண்ணிக்கை 23ஆம் திகதியும் பயணித்துள்ளன.

கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஊடாக அதே காலப்பகுதியில் நாளொன்றுக்கு 22,000 - 25,000 இடையிலான வாகனங்கள் பயணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு வீதிகளிலும் பொதுவான நாட்களில் 50000 - 70000 வரையான வாகனங்கள் பயணிக்கும் என திரு. ஓபநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.