Header Ads



கடலில் உயிரை விட்ட 2 இளைஞர்கள்

இரத்மலானை கடற்பகுதியில் நிராட சென்ற இரண்டு இளைஞர்கள் கடந்த தினத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

குறித்த அனர்த்தத்தில் காப்பாற்றப்பட்ட மேலுமொரு இளைஞர் தற்போதைய நிலையில் கலுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரத்மலானை சயுரபுர வீட்டுத் தொகுதிக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடந்த 17ம் திகதி குறித்த மூன்று இளைஞர்களும் நீராட சென்றனர்.

கடலில் நீராடிக்கொண்டிருந்த அவர்கள் கடல் அலையால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இதன் போது ஒரு இளைஞர் காப்பாற்றப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் காணாமல் போன மற்றைய இளைஞர்கள் அன்று இரவு வரை தேடப்பட்ட நிலையில் , இளைஞர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

நேற்று பிற்பகல் அகுலான காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீண்டும் இளைஞர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர் .

இதில் , ராகலை கடற்படை முகாம் அதிகாரிகளும் இணைந்துக்கொண்டிருந்தனர்.

தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருக்கும ்போது , 16 வயது கவிந்து ரந்துல என்ற மாணவரின் சடலம் நேற்று பிற்பகல் கரையொதுங்கியது.

பின்னர் 24 வயதுடைய சுபுன் மதுசங்கவின் உடல் இரத்மலானை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அங்குலான காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.