Header Ads



24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பில், பாதுக்கை பள்ளிவாசல்


-ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.ஆர்.எம்.வசீம்-

புது­வ­ரு­டத்தில் அதி­காலை இரண்டு மணி­ய­ளவில் பாதுக்கை, கல­கெ­தர சுவைலி எனும் பள்­ளி­வாசல் இனந்­தெ­ரி­யா­தோரால் தாக்­கப்­பட்டு, பள்­ளி­வா­சலின் முன்­க­தவின் கண்­ணா­டிகள் நொறுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த பள்­ளி­வாசல் மத்­ர­ஸதுல் அமீ­ரியா என்னும் பழைய பெயரிலும் அழைக்­கப்­ப­டு­கி­றது.

நேற்று அதி­காலை சுபஹு தொழு­கைக்­காக  அதான் கூறச் சென்ற நஸீர் என்­ப­வரே பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டுள்­ள­மையை முதலில் கண்டு பாதுக்கை பாட­சாலை வீதியில் இருக்கும் பெரிய பள்­ளி­வா­ச­லான மஸ்­ஜிதுல் அஸீஸா அல்­ஹ­மீடின் தலை­வ­ரான அக்ரம் ஹாஜிக்கு தொலை­பேசி மூலம் அறி­வித்­துள்ளார்.

சம்­பவம் உட­ன­டி­யாக பாதுக்கை பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­விக்­கப்­ப­டவே பொலிஸார் உட­ன­டி­யாக ஸ்தலத்­துக்கு விரைந்­தனர். பொலிஸ் மோப்ப நாய் அழைத்து வரப்­பட்டு சந்­தேக நபர்­களை இனங்­கா­ண்ப­தற்கு முயற்­சித்­த­போதும் பலன் ஏற்­ப­ட­வில்லை.

பொலிஸ் அத்­தி­யட்­சகர், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் உட்­பட குழு­வொன்றும் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது. பள்­ளி­வா­ச­லுக்கு தற்­போது 24 மணி­நேர பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு பொலிஸார் காவலில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

சந்­தேக நபர்­களை இனங்­கா­ண்ப­தற்கும் சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வ­தற்கும் தீவிர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மென பொலிஸார் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திடம் உறுதி வழங்­கி­யுள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்­பாக பாதுக்கை பாட­சாலை வீதி மஸ்­ஜிதுல் அஸீஸா அல்­ஹமீட் பள்­ளி­வா­சலின் தலைவர் அக்ரம் ராஜி ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில், 

“கல­கெ­தர மஸ்­ஜிதுல் சுவைலி பள்­ளி­வாசல் கதவு பாரிய ஏழு கற்­களால் தாக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் பள்­ளி­வாசல் கதவின் கண்­ணாடி சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­துடன்  பள்­ளி­வா­சலின் அலு­மி­னியக் கதவும் சேதத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளது.  பக்­கத்தில் இருந்து வந்­த­வர்­களே இந்தத் தாக்­கு­தலை நடத்தி இருக்­க­வேண்டும். அன்­றைய தினம் பள்­ளி­வா­சலில் இருந்த மௌலவி அங்கு இருக்­க­வில்லை. ஊருக்குப் போயி­ருந்­துள்ளார். பள்­ளி­வா­ச­லுக்கு ஜமாஅத் வந்து தங்­கு­வ­துண்டு. அன்று இரவு ஜமா­அத்தும் அங்கு தங்­கி­யி­ருக்­க­வில்லை. இந்தப் பகு­தியில் சுமார் 400 குடும்பங்கள் வாழ்கின்றன" என்றார். 

No comments

Powered by Blogger.