Header Ads



குவைத்திலுள்ள இலங்கையர்களுக்கு பெப்ரவரி 22 வரை மன்னிப்பு காலம்

விசா அனுமதிப்பத்திரமின்றி குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை குறித்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விசா முடிந்தும் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்கு  அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக, உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.