2020 வரை தேசிய அரசு பயணிக்கும், யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை - ரணில்
எம்மை திட்டுபவர்களுக்கு திட்டம் இல்லை. எம்மை விமர்சிப்பவர்களுக்கு பணம் இல்லை. எம்மிடமே அனைத்து அமைச்சுகளும் உள்ளன. மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் எமக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நாம் பயமில்லாமல் அனைத்து சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இதன்படியே விவாதத்திற்கான திகதியை அறிவித்தேன். ஆகவே நாங்கள் விவாதத்திற்கு தயாராக உள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் தேசிய அரசாங்கம் பயணிக்கும். ஆகவே யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. அத்துடன் கடன் மீள பெறாமல் இருக்கவும் கடன் முகாமைத்துவம் செய்யவும் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வரவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேகாலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது எம்மை பலரும் விமர்சிக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மீது வீணான பழிசுமத்துகின்றனர். எம்மை திட்டுபவர்களுக்கு திட்டம் இல்லை. எம்மை விமர்சிப்பவர்களுக்கு பணம் இல்லை. எம்மிடமே முக்கியமான அமைச்சுகள் உள்ளது. விமர்சனம் செய்பவர்கள் கிராமத்திற்கு திட்டம் இல்லாமல் வருகின்றனர். வட்டாரத்திற்கு வந்து பேசுவதற்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை. கிராம ஆட்சியை உருவாக்கும் தேர்தல் என்பதனை அறியாத அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன. எனவே கிராமத்தை யாரால் கட்டியெழுப்ப முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும்.
தற்போது பாராளுமன்ற அமர்வை கூட்டுவது தொடர்பில் பேசுகின்றனர். பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் எனக்கே உள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விவாதம் கோரினேன்.
நான் அதற்கும் சந்தர்ப்பம் வழங்கினேன். இந்நிலையில் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் விவாதிக்க சந்தர்ப்பம் கோருகின்றனர். இது தொடர்பாக அநுர குமார திஸாநாயக்க எம்.பி என்னிடம் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்தார்.
பெப்ரவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் நான் நேற்று இரவு சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து பேசினேன். எனவே நாம் விவாதத்திற்கு தயாராக உள்ளோம். எமக்கு மூடி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நாம் பயமில்லாமல் அனைத்து சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
2014 ஆம் ஆண்டு போன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கவில்லை. அத்துடன் நாம் நிவாரணத்தையும் சுதந்திரத்தையும் வழங்கினோம்.
எமக்கு எதிராக கூட தீர்ப்புகள் ஊடகங்கள் ஐக்கிய தேசியக் கட்சி யையே விமர்சிக்கின்றன. மக்கள் கூட்ட த்தை தொலைக்காட்சியில் காண்பிப்பது, ஒளிபரப்புவது கிடையாது. அவர்களுக்கு இந்த கூட்டத்தை ஒளிபரப்புவது பயமா கும்.
நாம் நாட்டின் வருமானத்தை அதிகரித்தோம். கடனை அடைக்க நாம் கடன் பெற்றுக்கொள்ளவில்லை. கடன் மீள பெறாமல் இருக்கவும் கடன் முகாமைத்துவம் செய்யவும் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வரவுள்ளேன். கடனை பொறுப்பேற்க இளைஞர்களுக்கு விருப்பமா? இதன்படி அடுத்த தலைமுறைக்கு நாம் கடனை சுமத்த மாட்டோம். தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்த பாரிய திட்டங்கள் வகுத்துள்ளோம். 4 இலட்சம் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். ஏற்றுமதி வருமானத்தை நாம் அதிகரித்துள்ளோம். இதுவும் போதாது இதனை விட தரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுள்ளோம்.
கண்டி முதல் அம்பாந்தோட்டை வரை ஒரு அதிவேக வீதி கட்டமைப்பை ஏற்படுத்தவுள்ளோம். மத்தள விமான நிலையத்தையும் ஆகஸ்ட் மாதம் குத்தகைக்கு வழங்கவுள்ளோம். அத்துடன் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் தேசிய அர சாங்கம் பயணிக்கும். ஆகவே யாரும் அச் சம் கொள்ள தேவையில்லை என்றார்.
Post a Comment