Header Ads



படைவீரரின் இத­யத்­தி­லி­ருந்து, 20 வரு­டங்­களின் பின் அகற்­றப்­பட்ட ரவை (படங்கள்)


(ரெ.கிறிஷ்­ணகாந்)

துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி காய­ம­டைந்த இலங்கை இரா­ணு­வத்தின் முன்னாள் வீர­ரான விஜே­சுந்­தர பண்­டா­ரவின் இத­யத்தில் சிக்­குண்­டி­ருந்த துப்­பாக்கி ரவை ஒன்று, சுமார் 20 வரு­டங்­களின் பின்னர் சத்­திர சிகிச்­சையின் மூலம் அகற்­றப்­பட்ட சம்­பவம் காலி­யி­லுள்ள வைத்­தி­ய­சாலை ஒன்றில் இடம்­பெற்­றுள்­ளது.

காலி­யி­லுள்ள கூட்­டு­றவு வைத்­தி­ய­சா­லையின் இத­யநோய் நிபுணர் நாமல் கமகே உள்­ளிட்ட வைத்­தியர் குழா­மினால் இந்த சத்­திர சிகிச்சை வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ரவை அகற்­றப்­பட்­டதன் பின்னர் விஜே­சுந்­தர தற்­போது சிறந்த தேகா­ரோக்­கி­யத்­துடன் காணப்­ப­டு­கின்றார்.

இந்­நி­லையில், சத்­தி­ர­சி­கிச்­சைக்கு உள்­ளான விஜே­சுந்­தர ஊடகம் ஒன்­றுக்கு தனது அனு­ப­வங்­களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பில் அவர் தெரி­விக்­கையில்,இந்த விடயம் எனக்கு புது­மை­யாக உள்­ளது. எனது உடலில் ரவை ஒன்று உள்­ளது என்­பது எனக்குத் தெரியும்.

ஆனால், அது இயத்­தி­னுள்தான் காணப்­பட்­ட­தென்­பதை நான் அறிந்­தி­ருக்­க­வில்லை. இதனை உடலில் வைத்­துக்­கொண்டே கடந்த காலங்­களில் கடி­ன­மான பல வேலை­களை செய்­துள்ளேன். வயல் வேலைகள், வீட்டு வேலைகள் உள்­ளிட்­ட­வை­களை செய்தேன்.
இரா­ணு­வத்தில் 1987 ஆம் ஆண்டு இணைந்தேன். எனது தொழிலை முத­லா­வது வடக்­கி­லி­ருந்து ஆரம்­பித்தேன். அதன்­பின்னர் தொழிலின் நிமித்தம் 1997 ஆம் ஆண்டில் வவு­னியா, மாங்­குளம் பிர­தே­சத்­துக்கு சென்றேன்.

அன்று மாங்­குளம் இரா­ணுவ முகாமை அண்­டிய காட்­டுப்­ப­கு­தியில் விடு­தலைப் புலி­க­ளுக்கும் எமக்­கு­மி­டையே பாரிய யுத்தம் நடை­பெற்­றது. அதில் வெற்­றி­கொண்டு அவர்­களின் ஆயு­தங்­களை கைப்­பற்­றிக்­கொண்டு திரும்­பும்­போது, மறைந்­தி­ருந்த விடு­தலை புலிகள் உறுப்­பினர் ஒருவர் எம்­மீது தாக்­குதல் நடத்­தினார். அதன் போதே நான் இவ்­வாறு துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கானேன்.


அதன்­பின்னர், சக நண்­பர்­களால் நான் வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் அங்­கி­ருந்து அநு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டேன். அங்கு எனக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்கள் குறித்த ரவையை அகற்ற தேவை­யில்லை. அதனால் உயி­ருக்கு எவ்­வித ஆபத்தும் இல்லை என்­றனர்.

அத­னை­ய­டுத்து. வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றிய சில காலத்­தி­லேயே இரா­ணு­வத்தில் இணைந்து மீண்டும் பணி­யாற்­றினேன். இந்த ரவை­யினால் உயி­ருக்கு எவ்­வித பாதிப்­பு­களும் இல்லை என்று வைத்­தி­யர்கள் கூறி­யதால் அது­பற்றி நானும் பெரி­தாக கருத்­திற்­கொள்­ள­வில்லை.

இச்­சம்­ப­வத்தின் பின்­னரும் ஒரு­த­டவை மோட்­டார்­குண்டுத் தாக்­கு­த­லுக்கு இலக்­காகிச் சிகிச்சை பெற்று மீண்டும் பணியில் இணைந்து கடந்த 2009 ஆம் ஆண்டு கட­மை­யி­லி­ருந்து ஓய்வு பெற்றேன்.


அதன்­பின்னர் ஓய்­வூ­தி­யத்தில் எமது ஊரான பிபி­லையில் வயல் காணி ஒன்றை வாங்கி அதில் விவ­சாயம் செய்­து­வந்தேன் இவ்­வாறு இருக்­கையில் அண்­மையில் மார்ப்புப் பகு­தியில் கடும் வலி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து, ஆசி­ரி­யை­யான எனது மனைவி என்னை மொன­ரா­கலை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்றார் என்றார்.

அதன்­பின்னர் பற்­பல சிகிச்சை நிலை­யங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­களின் மூலம் குறித்த ரவை இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு, உட­ன­டி­யாக சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்ள பரிந்­து­ரைக்­கப்­பட்டேன் எனக் கூறினார்.

அதற்­க­மைய. பல­ரது வேண்­டு­கோ­ளுக்கு இணங்க விஜே­சுந்­தர, காலி கராப்­பிட்­டி­யி­லுள்ள பிர­பல இதய சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ண­ரிடம் அழைத்துச் செல்­லப்­பட்டு சத்­தி­ர­சி­கிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு ரவை அகற்­றப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் வைத்­தி­யர்கள் தெரி­விக்­கையில், இடக்கை வழி­யாக உட­லினுள் நுழைந்த ரவையே இத­யத்தை அடைந்­துள்­ளது. அதனை நாம் பரி­சோ­த­னை­யூ­டாக அறிந்து கொண்டோம். அதன்­பின்னர் சுமார் 45 நிமிட சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் ரவை அகற்­றப்­பட்­டது.

இடக்­கையில் தோட்­பட்டை பகு­தியில் இந்த ரவை உள்நுழைந்து இதயத்திலிருந்து கையுடன் தொடர்புபடும் நாளத்தின் வழியாக இதயத்துக்கு பயணித்து இதயசுவற்றை துளைத்துக்கொண்டு, வலது இதயவறைக்கு பயணித்து அங்குள்ள நார் இழையங்களில் சிக்குண்டுள்ளது.

இதே­வேளை, இந்த ரவை­யினால் விஜே­சுந்­த­ர­வுக்கு மார்ப்பு வலி ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும், இரத்­த­நா­ள­மொன்றில் ஏற்­பட்­டி­ருந்த அடைப்­பொன்றின் கார­ண­மா­கவே அவ­ருக்கு வலி ஏற்­பட்­ட­தா­கவும் வைத்­தி­யர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.



3 comments:

  1. இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருக்க முழுமையான தகுதி இந்த போர் வீரன் விஜேசுந்தரவுக்கு மட்டும் தான் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.