Header Ads



18 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமான பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதியில் இருந்து இன்று காலை 6 மணி வரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 55 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் அவை சம்பந்தமாக 10 வேட்பாளர்கள் உட்பட 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் முறைப்பாடுகள் சம்பந்தமாக 8 வேட்பாளர்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.