Header Ads



18.24 கிராம் ஹெரோயின், வைத்திருந்தவருக்கு மரண தண்டனை

18.24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவானால் இன்றைய தினம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மல்வான பிரதேசத்தினைச் சேர்ந்த குற்றவாளி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருளுடன் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து குறித்த குற்றவாளியை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.