Header Ads



பாடசாலை செல்லாத 1500 பேரும், 55 பட்டதாரிகளும் கம்பி எண்ணுகிறார்கள்


ஒரு நாளாவது பாடசாலை செல்லாத கைதிகள் 1,523 பேர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, தரம் 5 வரை பாடசாலையில் கல்வி கற்றவர்கள் 6,879 பேரும், தரம் 5 சித்தியடைந்த 5894 பேரும், தரம் 8 சித்தியடைந்த 6129 பேரும் சிறைச்சாலையில் கைதிகளாக உள்ளனர்.

அத்தோடு, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தோற்றிய 2643 பேர், உயர்தரத்தில் தோற்றியவர்கள் 909 பேர், பட்டதாரிகள் 55 பேர் சிறையில் உள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெலிக்கடை, போகம்பர, மஹர உட்பட நாட்டிலுள்ள 25 சிறைச்சாலைகளில் மொத்தம் 24060 பேர் கைதிகளாக உள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.