Header Ads



சல்மானின் அரண்மனை முன் போராட்டம் - 11 இளவர்சர்கள் கைது

சவுதி அரேபியாவில் மன்னர் அரண்மனையின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சவுதி இளவர்சர்கள் 11 பேர் அதிரடியாக கைது செய்யபட்டுள்ளனர்.

இது தொடர்பாக சப்க் செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில், "சவுதியில் மன்னரின் அரண்மனைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 11 சவுதி இளவரசர்கள் பொலிசாரால் விலகச் சொல்லியும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்கள் கைது செய்யப்ட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

சவுதி இளவரசர்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் தொடர்பான கட்டணத்தை இனி அரசு செலுத்துவது நிறுத்தப்படும் என்று சவுதி அரசர் கூறியிருந்தார்.

இதனை திரும்பப் பெறவும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இளவரசர் ஒருவரது இழப்பீடு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சவுதி அரேபியாவின் 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பெருந்தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. This is a joke.
    After a few months they will come out ..

    ReplyDelete

  2. وعن ابن عمر رضي الله عنهما قال : ذكر النبي صلى الله عليه وسلم فقال : اللهم بارك لنا في شامنا ، اللهم بارك لنا في يمننا ، قالوا : وفي نجدنا ، قال : اللهم بارك لنا في شامنا ، اللهم بارك لنا في يمننا ، قالوا : يا رسول الله وفي نجدنا فأظنه قال الثالثة : هناك الزلازل والفتن ، وبها يطلع قرن الشيطان . رواه البخاري والترمذي وأحمد .

    ReplyDelete
    Replies
    1. Could you please translate this hadeed into tamil brother?

      Delete

Powered by Blogger.