10 ஆம் திகதி தேர்தலை நடத்த, எவ்வித தடைகளும் இல்லை
எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித தடைகளும் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அதிகபட்ச பலத்துடன் செயற்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனவே இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல அரசியல் கட்சிகள் சுயேட்சை கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment