Header Ads



புதிய 1000 ரூபாய் நாணயத்தாளில், சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல்


இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் அடைவதை சிறப்பிக்குமுகமாக வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் நாணயத் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் படம் அச்சிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஏலவே, சமூகப் பாதுகாப்பினை ஏற்படுத்துவதில் சமய நிறுவனங்களின் முக்கியத்துவம் எனும் விடயத்தை உள்ளடக்கி இவ்வருடம் தரம் 9 மாணவர்களுக்கான குடியியல் கல்வி பாடப்புத்தகத்திலும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் படம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் சாய்ந்தமருது மண் இவ்வருடத்தில் முக்கிய பேசுபொருளாக பேசப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் சாய்ந்தமருதை பெருமைப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றமையையிட்டு சாய்ந்தமருது மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதுடன் சாய்ந்தமருது மண்ணை கௌரவப்படுத்திய அரசுக்கு நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.

(நியாஸ்)




4 comments:

  1. முஸ்லிம்களின் ஒரு அடையாளமாக ஒரு பள்ளிவாசல் சேர்க்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கொள்வதே சிறந்தது. இதை ஊர்ப்பெருமையாகவும் பேசுபொருளாகவும் எடுத்துக்கொள்வது எந்த விதத்திலும் சரியானது அல்ல. பெருமை அல்லாஹ்வுக்குரியது அயற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.

    ஒவ்வொரு விஷயத்திலும் அது பற்றிய தீர்க்கமான அறிவு அல்லாஹ்விடத்திலேயே அன்றி வேறில்லை.

    ReplyDelete
  2. நாம் பெருமை பட இதில் எதுவுமே கிடையாது ஏனெனில் நிச்சயமாக பெருமை என்பது அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்
    .நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஓர் காலம் வரும் மனிதர்கள் தங்களுடைய பள்ளிவாயல் விடயத்தை கொண்டு பெருமை அடுத்துக்கெள்வார்கள்.அக்காலம் இக்காலமாகக்கூட இருக்கக் கூடும்.எனவே இஸ்லாமியர்களே என்றும் அல்லாஹ்வை பயந்து நடப்போம்

    ReplyDelete
  3. இதில பெரும பட எதுவும் இல்லை, ஏனெனில் நிச்சயமாக பெருமை என்பது அல்லாஹ்வை மாத்திரம் சாரக்கூடியது. இப்படி நாம் பெருமை கொள்ளவது மறுமை நாளின் ஓர் அடையாளம் ஏன் தெரியுமா...? எம் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஓர் காலம் வரும் அப்போது மக்கள் தங்களுடைய பள்ளிவாசல் விடையத்தைக் கொண்டு பெருமை அடித்துக்கொள்வார்கள் . அக்காலமோ தெரியவில்லை இக்காலம் எனவே ஒவ்வொரு விடயத்திலும் அல்லாஹ்வை பயப்டுவோம்

    ReplyDelete

Powered by Blogger.