Header Ads



UNP க்கும் SLFP க்கும் அளிக்கின்ற வாக்குகள் முஸ்லிம் தலைவர்களை பலப்படுத்துவதாக அமையும் - கருணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. தமிழ் மக்களை விலை பேசி விற்றிருப்பதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று, கோரளைப்பற்று வடக்கு, ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை இன்று -20 தாக்கல் செய்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பு இது போன்ற பாரிய துரோகங்களை செய்திருக்கின்றது. அத்துடன், சுமந்திரன் அமைச்சுப் பதவியை பெற்றிருக்கின்றார் என்ற விடயத்தை நேற்று அறிந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனித்தமிழ் கட்சியாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தமிழ் மக்களது பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் எங்களது வேட்பாளர்களை கொண்டு வந்திருக்கிறோம். எங்களது கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக வாக்களிக்க வேண்டும்.

எங்களுடைய கட்சிக்கு அளிக்கின்ற வாக்கின் மூலமே தமிழர்களின் இருப்பை எமது மாவட்டத்தில் பாதுகாக்க முடியும். இங்கு பல கட்சிகள் போட்டியிடுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கின்ற வாக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அளிக்கின்ற வாக்கோ அது முஸ்லிம் தலைவர்களை பலப்படுத்துவதற்கான வாக்காகவே அமையும்.

ஆகவே சிங்களக் கட்சிகளை வீசி எறிந்து விட்டு தமிழ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதே போலத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. தமிழ் மக்களை விலை பேசி விற்றிருக்கின்றது.

இது போன்ற பாரிய துரோகங்களைச் செய்திருக்கின்றது. நேற்றுக் கூட சுமந்திரன் அமைச்சுப்பதவியைப் பெற்றிருக்கின்றார் என்ற விடயத்தினையும் அறிந்தோம்.

முன்னாள் போராளிகளால் தங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஊடகங்களில் தெரிவித்து பொய்ப்பிரச்சாரத்தை, ஒரு துரோகத்தனத்தை தமிழ் மக்கள் மத்தியில் சுமந்திரன் செய்து வருகிறார்.

இது போன்ற கூட்டுகள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் புரிந்து கொண்டு மக்கள் எல்லோரும் எங்களின் பின்னால் அணிதிரளுங்கள் என்றார்.

4 comments:

  1. தமிழ் பயங்கரவாதத்தின் முகம் இவன்

    ReplyDelete
  2. தமிழ் மக்களின் விடிவிற்காக பட்ட பாடுகளை காட்டிக் கொடுத்த கபோதி வந்திட்டாரு பேச. நீ இதுவரைக்கும் உயிரோடு இருப்பது முட்டாள் முஸ்லிம்கள் போட்ட பிச்ச என்பதை மறந்து விடாதே. அன்று உம்மை ஒரு சோனி கொழும்புக்கு அழைத்துச் செல்லவில்லையாயின் உன் தலைவன உனக்கு சங்கூதி இருப்பான் தெரியுமா.

    ReplyDelete
  3. துரோகத்தை பற்றி கதைப்பதற்கு இவருக்கு தகுதி உள்ளதா.தமிழ் சமூகத்தை காட்டிக்கொடுத்து கூட்டிக்கொடுத்து மாமா வேலை பார்க்கும் இவர் துரோகத்தை பற்றி கதைக்கிறார்..

    ReplyDelete
    Replies
    1. He is a womanizer. Naaiku irukkum nanri kooda ithukkilla.

      Delete

Powered by Blogger.