SLMC - ACMC வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை
உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலம் மஹிந்த ஆதரவு அணியினது கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், 90 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு 03 தடவைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது வாக்கெடுப்பில் சட்டமூலம் 88 மேலதிக வாக்குகளால் சபையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது ஆதரவாக 144 வாக்குகள் அளிக்கப்பட்டதோடு, எதிராக எவரும் வாக்களிக்காதபோதும் 56 பேர் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் சபையில் இருந்தபோதும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment