Header Ads



அரசாங்கத்தில் SLFP அங்கம் வகிக்குமா? தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் கூட்டணி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்குமா என்பது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது சம்பந்தமான தீர்மானத்தை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது குறித்து இந்த மாதம் 31 ஆம் திகதி தீர்மானிக்கப்படவிருந்த போதிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சி முழுமையாக கவனம் செலுத்தியுள்ளதால், தீர்மானம் எடுப்பதை ஒத்திவைத்துள்ளதாகவும் அமைச்சர் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. சந்திரிக்கா UNP ஆட்சியை கலைத்ததை ரணில் மறந்து விட்டாரா

    ReplyDelete

Powered by Blogger.