Mp களுக்கு ஞாபக மறதி, லெப்டொப் பயன்படுத்தவும் தெரியாதாம்...!
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஆசனங்களுக்கு முன்னால் பொருத்தப்பட்டுள்ள மடிக்கணணிகளில் 20 வீதத்துக்கும் குறைவானவை மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
டிஜிட்டல்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் தமது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போதே அவர் இதனைக்குறிப்பிட்டார்
இதனை விடுத்து இன்னமும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடதாசிகளில் எழுதிவந்தே தமது உரைகளை ஆற்றுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடவுச்சொற்களை மறந்துவிடுகின்றனர்.
எனினும் அவர்களுக்காக கைவிரல் அடையாளங்களுடன் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment