Header Ads



காத்தான்குடியை வெற்றிகொள்ள வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன - ஹிஸ்புல்லா

மட்டக்களப்பு - காத்தான்குடி நகரசபைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று -21- நண்பகல் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வின் தலைமையில் குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் காத்தான்குடி நகரசபையை வெற்றி கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சிறந்த வேட்பாளர்களை தொகுதிகளில் களமிறக்கியுள்ளோம். மக்களின் கருத்துக்களுக்கு அமையவே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தேர்தலை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.